திருப்பூரில் ஆதார் மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்...

திருப்பூரில் ஆதார் மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூரில் ஆதார் மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்...
x
திருப்பூரில் ஆதார் மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைகழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
இதுகுறித்து ஆதார் மைய நிர்வாகிகள் முறையாக பதிலளிப்பது இல்லை என்றும் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால் பணிகள் முடங்கி விடுவதாகவும் அலட்சியமாக பதிலளிப்பதாக கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆதார் மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆதார் வழங்க தாமதிப்பதால் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ்  உள்ளிட்ட வற்றை எடுக்க தாமதமாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்