ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வாக்குவாதம் - சலசலப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாகையில் நடைபெற்ற போராட்டத்தில் சிலர் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வாக்குவாதம் - சலசலப்பு
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாகையில் நடைபெற்ற போராட்டத்தில் சிலர் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. புத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் கீழ்வேளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், அக்கட்சி மாவட்டச் செயலாளர் கௌதமன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அங்கு சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மனித சங்கிலி போராட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து இடம் மாற்றி நிற்க வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்