மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள கூடூர் என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லாரி ஒன்று அனுமதியின்றி மணலை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
Next Story