காலி குடங்களுடன் 300க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

300க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலி குடங்களுடன் 300க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்
x
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெங்கட்ராஜ் குப்பம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்