அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு... 3 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சென்னை பல்லாவரத்தில், முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
சென்னை பல்லாவரத்தில், முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். விஜயகுமார் பல்லாவரம் நகராட்சி 8வது வார்டு அதிமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தண்ணீர் விடுவதிலும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு விஜயகுமார் நடந்து சென்று கொண்டிருந்த போது, 3 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது. படுகாயமடைந்த விஜயகுமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story