தேன்கனிக்கோட்டை : ஒரு மாதத்தில் 19 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கிரு​ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று சாலையில் கிடந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.
தேன்கனிக்கோட்டை : ஒரு மாதத்தில் 19 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
x
கிரு​ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று சாலையில் கிடந்த  6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர். உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 19 நாட்டு துப்பாக்கிகளை மர்ம நபர்கள் சாலையில் வீசி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிகள் சமூக விரோதிகள் கையில் சிக்கினால் ஆபத்து உருவாகும் என்று அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்