சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 3 தம்பதிகளுக்கு, சாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகையை 8 வாரத்திற்குள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
x
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 3 தம்பதிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட போதிலும், டாக்டர் அம்பேத்கர் நிறுவனம் சில காரணங்களுக்காக அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்க மறுத்து விட்டதாக கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 3 தம்பதிகளுக்கும் 8 வாரத்திற்குள் சாதி மறுப்பு திருமண ஊக்கத்தொகையை  வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்