குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
x
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில்தான் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகள்,  தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது, தமிழகத்திற்கு கேரளா தண்ணீர் அளிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதை ஏற்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்