மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

15 லட்ச ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
x
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்,  15 லட்ச ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைகளில் குடிநீர் பிரச்சினை இல்லை என்றும், பற்றாக்குறை ஏற்படா வண்ணம் இருக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்