சாலையின் குறுக்கே ஒற்றை யானை - வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்

வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை மிதவேகத்தில் இயக்குமாறு வனத்துறை அறிவுரை.
சாலையின் குறுக்கே ஒற்றை யானை - வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்
x
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் பகுதியில் சாலையின் நடுவே ஒற்றை யானை நின்று, மரத்தின் கிளைகளை ஒடித்து தின்றுகொண்டிருந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறமும் நகரமுடியாமல் வரிசையாக வாகனத்தை நிறுத்திவிட்டு யானையை வேடிக்கை பார்த்தபடி நின்றனர். சுமார் அரைமணி நேரம் சாலையில் நின்றுகொண்டிருந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.  வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை மிதவேகத்தில் இயக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்