நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதைச் செய்ய மத்திய அரசு தவறும் பட்சத்தில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்து நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்