தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேஸ்வர மீனவர்கள் : அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி

ராமேஸ்வரத்தில், தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக அளவில் மீன் கிடைத்ததால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேஸ்வர மீனவர்கள் : அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி
x
ராமேஸ்வரத்தில், தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக அளவில் மீன் கிடைத்ததால், மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீனவர்கள் நேற்று அதிகாலை ராமேஸ்வரம் மண்டபம், பாம்பன், தொண்டி, கீழக்கரை, ஏன்வாடி போன்ற பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் சுமார் 400 கிலோ முதல் 800 கிலோ வரை விலை உயர்ந்த மீன்கள், இறால், நண்டு உள்ளிட்டவை கிடைத்ததால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீன்கள் அதிகளவில் கிடைத்திருப்பதால் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிடித்து வரப்பட்ட மீன்களுக்கு போதிய விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் காத்திருக்கின்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்