திருப்பதியில் தமிழக பக்தர்களை தாக்கிய சம்பவம் : சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மீது வழக்குப்பதிவு

திருப்பதியில், தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் தமிழக பக்தர்களை தாக்கிய சம்பவம் : சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மீது வழக்குப்பதிவு
x
திருப்பதியில், தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி, திருப்பதி  சோதனை சாவடியில்  செங்கல்பட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவரிடம் இருந்த புகைப்பொருளை அதிகாரிகள் பறித்து வீசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சம்மந்தப்பட்ட பக்தரையும் அவருடன் இருந்தவர்களையும் சிறப்பு பாதுகாப்பு படை போலீசார், கடுமையாக தாக்கினர். இதையடுத்து, ஆந்திர சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் 4 பேர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான விஜிலென்ஸ் துறையில் பணியாற்றி வரும் இருவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புகைப் பொருளை எடுத்து வந்த டில்லி பாபு, கன்னியப்பன் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்