கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி : காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
x
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆனந்தன் மற்றும் மதுரையை சேர்ந்த ஷாஜிதா ஆகியோர் கடந்த 14 ஆம் தேதி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஷாஜிதாவின் பெற்றோர் அவரை காணவில்லை என மதுரை போலீசில் புகார் அளித்துள்ளனர். மதுரை போலீசார் கிருஷ்ணகிரிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி ஆனந்தன் மற்றும் ஷாஜிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்