"11,12ஆம் மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

2017 -2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
2017 -2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிறகு பேசிய அவர், புதிய பாடத்திட்டம் காரணமாக நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மிக விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் எனக் கூறினார். மேலும், அங்கன்வாடி மையங்களில் உள்ள மாணவர்களுக்கு டை உள்ளிட்டவை  வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்