லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து அதிவேகமாக மோதி விபத்துகுள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
x
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் புறவழிச்சாலையில் சென்னையில் இருந்து கோவை நோக்கி 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி சொகுசு பேருந்து, முன்னால் சென்ற லாரியின் பின் புறத்தில் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆத்தூரை சேர்ந்த வினோத், ஈரோடை சேர்ந்த முகமது ஜில்பர் ,புது டெல்லியை சேர்ந்த சிவா சிங், ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தியாக துருகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Next Story

மேலும் செய்திகள்