திருப்பூர் : பொதுமக்களுக்கு வேத புத்தகம் வழங்கிய கிருஸ்துவர்கள் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருச்சபை தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் : பொதுமக்களுக்கு வேத புத்தகம் வழங்கிய கிருஸ்துவர்கள் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு
x
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திருச்சபை தொடங்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது. அங்கு பொதுமக்களுக்கு இலவசமாக பைபிள் வழங்கப்பட்டது. அதையறிந்து வந்த இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இரண்டு தரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறை முன்னிலையில் இரண்டு இரு பிரிவினரும் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்