துபாய், இலங்கையில் இருந்து ரூ. 69 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

துபாய் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 3 பேரை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
துபாய், இலங்கையில் இருந்து ரூ. 69 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்
x
துபாய், இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 3 பேரை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அதனடிப்படையில்  சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த அதனான் , மலப்புரத்தை சேர்ந்த ஷிபியுல் ரகுமான்  இருவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 65 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 950 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல  கொழும்பில் இருந்து வந்த சீதாலட்சுமி என்பவரை சோதனை செய்து 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள 131 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்களை கைது செய்துள்ள சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்