அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் தாவி தாவி அட்டகாசம் செய்த குரங்கு...

மேஜையில் தாவித் தாவிக் குதித்த குரங்கை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் வெளியேற்றினர்.
x
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கஜா புயல் நிவாரண பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பேசிக்கொண்டு இருந்த போது, குரங்கு ஒன்று அரங்குக்குள் புகுந்து அங்கும்  இங்கும் தாவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேஜையில் தாவித் தாவிக் குதித்த குரங்கை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அதிகாரிகள் வெளியேற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்