பாரம்பரிய உணவு கண்காட்சி : இயற்கை உணவு முறை குறித்து விழிப்புணர்வு

நாகையில் துரித உணவை தவிர்த்து, இயற்கை உணவு முறைக்கு அடுத்த தலைமுறையை அழைத்து செல்லும் வகையில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
பாரம்பரிய உணவு கண்காட்சி : இயற்கை உணவு முறை குறித்து விழிப்புணர்வு
x
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில், உணவு முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது குறித்த பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை சார்பில் இந்த கண்கட்சி நடைபெற்றது. இதில் ராகி புட்டு, தினை, கம்பு வகை கொழுக்கட்டைகள், மாப்பிள்ளை சம்பா, பொரி உருண்டை, கடலை மிட்டாய்,  தேன்குழல் முறுக்கு, பாசிப்பருப்பு உருண்டை, கைமுறுக்கு, முளைகட்டிய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியில் துரித உணவை தவிர்ப்போம், இயற்கை  உணவு முறைக்கு அடுத்த தலைமுறையை அழைத்து செல்வோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்