சந்துக்கடையில் தகராறு - அடித்து கொல்லப்பட்ட இளைஞர்...

சேலம் அருகே சட்ட விரோத மதுக்கடையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
x
சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள கக்கன் காலனியில் தேவி என்பவர் நடத்தி வரும் சட்டவிரோத மதுக் கடையில், சதீஷ்குமார் என்பவர் மது வாங்கி உள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, தேவியின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் சதீஷ் குமாரின் வீட்டுக்கு சென்று அரையும், அவரது பெற்றோரையும் தாக்கியுள்ளனர். அதில் சதீஷ் குமார் உயிரிழந்தார். அவரது பெற்றோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், அந்த பகுதியில் இயங்கும் சட்ட விரோத மதுக் கடைகளை அகற்றக் கோரியும் சேலம் - ஆத்தூர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்