திருப்பூரில் கன மழை - குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூரில் கன மழை - குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்
x
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாநகராட்சியின் 21 வது வார்டுக்குட்பட்ட நல்லாத்துபாளையத்தில் பால வேலைகள் நடைபெற்று வருவதால் மழை நீர் செல்லமுடியாமல் அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இதனால் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் தடுப்புக்களை அகற்றி மழைநீரை வடிய வைத்தனர். மழையை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உரிய முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்