சிலைக்கடத்தல் வழக்கு - சிறப்பு அமர்வு கலைப்பு - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலைக்கடத்தல் வழக்கு - சிறப்பு அமர்வு கலைப்பு - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
x
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கோவில் சிலைகள், கோவில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலையில் அமைக்கப்பட்டது.தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நியமித்த அறிவிப்பாணை மாற்றியமைத்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. இனிமேல் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை, பொது நல வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்