முகிலன் காணாமல் போனது பற்றி அரசு விளக்க வேண்டும் - பா.ரஞ்சித்

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் இருப்பதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
முகிலன் காணாமல் போனது பற்றி அரசு விளக்க வேண்டும் - பா.ரஞ்சித்
x
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் இருப்பதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஒசூர் அருகே உள்ள மத்திகிரியில் ஜெய்பீம் அமைப்பு மற்றும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி, நூலகம், இரவு பாடசாலை தொடக்க விழா நடைபெற்றது. அவற்றை திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் திறந்து வைத்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது பற்றி அரசு விளக்கம் தர வேண்டும் என்றார்.  தமிழக இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு இன்மை என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளதாக குறிப்பிட்ட பா.ரஞ்சித், தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைவாய்ப்புகள் மற்ற மாநிலத்தவர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்