"ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும்" - தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும் - தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
x
ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய திறந்தவெளி கிணறுகள், தாழ்வான மின்கம்பிகள் போன்றவை இருந்தால் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பாடப்புத்தகம், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், இலவச பயண அட்டைகள் அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்க வேண்டும் எனவும் தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்