புகையிலை முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது - குழந்தைசாமி, சுகாதாரத்துறை இயக்குனர்

புகையிலை பொருட்களை தடை செய்யும் முயற்சியில், தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சுகாதார இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
x
புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு பாடல் வெளியிடும் நிகழ்ச்சி  சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் ஸ்டோரி, மானிட்டர் செயலி மற்றும் விளம்பர போஸ்டர்கள் மற்றும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தை சாமி, புகையிலை பொருட்களை தடை செய்யும் முயற்சியில், தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்