கட்டித்தரப்படாத இடிக்கப்பட்ட வீடுகள் ...மலைவாழ் மக்கள் வேதனை

பெரியகுளம் அருகே சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வீடுகள், இதுவரை கட்டித்தரப்படாததால், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
x
தனியார் தொண்டு நிறுவனத்தால் ராசிமலையில் கட்டித்தரப்பட்ட, வீடுகள், சீரமைப்பு பணிக்காக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. 9 மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் வீடுகள் கட்டித்தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. வீடுகளை இழந்த மலைவாழ் மக்கள், வனத்தில் சிறு சிறு குடிசை வீடுகள், டிஜிட்டல் பேனர்களால் குடில்கள் அமைத்து வசித்து வருகின்றனர். தற்போது, மழைக்காலம் வருவதால், தற்காலிக குடில்களில் தங்குவது மிகவும் ஆபத்து என வேதனை தெரிவித்த ராசிமலை மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தும் பலனில்லை எனக் கூறுகின்றனர். தங்களது நலன் கருதி, உடனடியாக, வீடுகள் கட்டிக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலைவாழ் மக்களின் கோரிக்கையாகும். 

Next Story

மேலும் செய்திகள்