ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி , எம்எல்ஏக்கள் ஊர்வலம்

17-வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க எம்.பிக்கள், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மெரினாகடற்கரையில் ஒன்று திரண்டனர்.
x
17-வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க எம்.பிக்கள், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மெரினாகடற்கரையில் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், உழைப்பாளர் சிலையில் அருகே இருந்து பேரணியாக புறப்பட்டனர். வெற்றி முழக்கம் எழுப்பியபடி புறப்பட்ட பேரணி அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் நினைவிடத்தில் நிறைவுபெற்றது. இரு தலைவர்கள் நினைவிடத்திலும், மலர் வளையம் வைத்து தி.மு.கவினர் மரியாதை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்