ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வீசப்பட்ட சடலம் - போலீசார் தீவிர விசாரணை

வேலூரில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொழிலாளியை கொலை செய்து சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வீசப்பட்ட சடலம் - போலீசார் தீவிர விசாரணை
x
வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரிஸ்வான் ஷெரிப். நேற்று மாலை 3 மணிக்கு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் சேண்பாக்க ரயில்வே மேம்பாலம் அடியில் ரிஸ்வான் ஷெரிப் சடலமாக கிடந்துள்ளார். அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து விட்டு, ரயில்வே மேம்பாலம் அடியில் உள்ள ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் ரிஸ்வான் ஷெரிப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்