குழந்தை விற்பனை வழக்கு - சிபிசிஐடியின் மனு மீது இன்று விசாரணை

குழந்தை விற்பனை வழக்கில் திருச்சியில் சரணடைந்த நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
குழந்தை விற்பனை வழக்கு - சிபிசிஐடியின் மனு மீது இன்று விசாரணை
x
குழந்தை விற்பனை வழக்கில் திருச்சியில் சரணடைந்த நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு  சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் செவிலியர் அமுதவள்ளி, பெங்களூருவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ரேகா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார், திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 16ம் தேதி சரணடைந்தார். அவர் திருச்சி மத்திய அடைக்கப்பட்டதை அடுத்து, அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்