ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் சாமி தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் சாமி தரிசனம்...
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை திருப்பதி சென்ற பன்னீர் செல்வம், இரவு திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து, இன்று காலை சிறப்பு தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின், அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்க நாயக்கர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்கி தீர்த்தப் பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து அவர் கோவிலின் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்