சிகிச்சை பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறும் செவிலியர்...

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் செவிலியர் லஞ்சம் பெறும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்,  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு குளுகோஸ் செலுத்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், அதற்காக 200 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அங்கு பணிபுரியும் செவிலியர்கள் வாங்கியுள்ளனர். அந்த பணத்தை உதவியாளர் ஜெயா என்பவர் பெறும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதையடுத்து நோயாளியின் உறவினரும் சமூக ஆர்வலருமான நவ்மான்  என்பவர் லஞ்சம் பெற்று சிகிச்சை அளிக்கும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்