கல்லால் தாக்கி இளைஞர் படுகொலை : போலீசார் தீவிர விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு பேருந்து நிறுத்தம் அருகில், மயில்சாமி என்ற இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
கல்லால் தாக்கி இளைஞர் படுகொலை : போலீசார் தீவிர விசாரணை
x
ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு பேருந்து நிறுத்தம் அருகில், மயில்சாமி என்ற இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், இறந்து கிடப்பவரின் அடையாளங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்காமல் திரும்பியது. இதை அடுத்து கோவையிலிருந்து தடவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் மயில்சாமி இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்