கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு : 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம்

தரங்கம்பாடி அருகே விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர்.
கெயில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு  : 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தரங்கம்பாடி அருகே விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரம் கெயில் நிறுவனம், எரிவாயு  குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், 5வது நாளாக போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். அப்போது இரணியன் உட்பட விவசாயிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்