அரவக்குறிச்சி தொகுதி ம.நீ.ம. வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும்படை சோதனை

அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி தொகுதி ம.நீ.ம. வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும்படை சோதனை
x
அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படை அதிகாரிகள், ஏதும் கிடைக்காததால் வெறும் கையுடன் திரும்பினர். சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் மோகன்ராஜ், தங்கள் அலுவலகத்தில் சோதனை செய்வதாக கூறி, திசை திருப்பிவிட்டு, வாக்காளர்களுக்கு அதிமுக மற்றும் திமுகவினர் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார். ஏழு பண்டல்களில் வினியோகம் செய்யப்படாத பிரசுரங்கள் மட்டுமே இருந்ததை பார்த்த அதிகாரிகள், திரும்பி சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்