குடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில், கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
குடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளானோர் பங்கேற்பு
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில், கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, இந்த பூப்பல்லக்கு ஊர்வலத்தின் போது, கோயில் நிர்வாகியின் உறவினரான கீர்த்தி என்பவரை, 3 நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி சாலையில் பூப்பல்லக்கை நிறுத்தி மறியலில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்