மெரினா அருகே பயங்கர தீ விபத்து : 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்

தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் சென்னை மெரினா அருகே அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது.
x
சென்னை பட்டினப்பாக்கம் டுமீல் குப்பத்தில் உள்ள  குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,சில வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதில் 60-க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்துக்கு காரணம் மின்கசிவு என கூறப்படுகிறது.   


Next Story

மேலும் செய்திகள்