திருப்பூர் : காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் : காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்
x
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் காங்கயம் வழியாக, ஊதியூர், குண்டடம், சென்னிமலை ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக செயல்படாத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்