குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி மறியல்

சென்னை குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் தனியார் தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி மறியல்
x
சென்னை குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் தனியார் தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரவாயல் - தாம்பரம் செல்லும் பைபாஸ் சர்வீஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான 8 தண்ணீர் கம்பெனிகள்  உள்ளது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், தண்ணீர் பிரச்சனை தீரும் வரை தண்ணீர் கம்பெனியை மூடும்மாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து, தண்ணீர் கம்பெனி மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்