மாம்பழம் பதப்படுத்தும் மையம் தேவை - விவசாயிகள் கோரிக்கை...

மாம்பழம் பதப்படுத்தும் மையம் தேவை என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை...
x
நெல்லை மாவட்டம் தென்காசியில், குளிர்சாதன வசதியுடன் மாம்பழம் பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளைச்சல் அதிகமாக இருப்பதால் மாம்பழங்களின் விலை சரிந்து, அவை வீணாகுவதாக கூறும் விவசாயிகள், இதனால் அதிக நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதை தடுக்க, தென்காசியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மாம்பழம் பதப்படுத்தும் மையம் அமைத்தால், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்