சாலை விபத்தில் பிரபல நீச்சல் வீரர் உயிரிழப்பு : விபத்தா? சதியா? - உறவினர்கள் சந்தேகம்

சென்னையில் பிரபல நீச்சல் வீரர் ஒருவர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாலை விபத்தில் பிரபல நீச்சல் வீரர் உயிரிழப்பு : விபத்தா? சதியா? - உறவினர்கள் சந்தேகம்
x
சென்னை ஷெனாய்நகர் கஜலட்சுமி காலனியைச் சேர்ந்த டாக்டர் பத்ரிநாத் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன். நீச்சல் வீரரான இவர், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவில் பணிபுரிந்த பாலகிருஷ்ணன், விடுமுறைக்கு சென்னைக்கு வந்த போது விபத்தில் சிக்கியுள்ளார். நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியில் இருந்து அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது கான்கிரீட் கலக்கும் லாரியில் மோதி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பாலகிருஷ்ணன் கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேர்வாகியிருந்தார். காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கக்கூடாது என அவரை அப்போது சிலர் தாக்கினர். அதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பாலகிருஷ்ணனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்