1330 திருக்குறள்களை சாக்பீசில் எழுதி மாணவர் சாதனை...

சாக்பீஸை கொண்டு எழுத முடியும், ஆனால் சாக்பீஸிலேயே எழுதி சாதனை படைத்திருக்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர்...
x
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்மனூர் பகுதியை சேர்ந்தவர்  சந்தோஷ்குமார். அவர் அங்குள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பிற்கு செல்ல உள்ளார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை  சந்தோஷ்குமாருக்கு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது.



ஆனால் வறுமை காரணமாக அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த நிலையில், தமிழ் மீது கொண்ட பற்றால் சந்தோஷ்குமார் சாக்பீஸில் 1330 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் 1463 சாக்பீஸை பயன்படுத்தி உள்ளார். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்புகளை வண்ண சாக்பீஸிலும் குறள்களை வெள்ளை சாக்பீஸிலும் சந்தோஷ்குமார் எழுதியுள்ளார். முன்பக்கம் குறளின் முதல் வரியும் பின்புறம் அடுத்த வரியும் வரும்படி அவர்  எழுதியுள்ளார்.  இதற்கு ஒரு நாளைக்கு 20 மணிநேரம் செலவிட்டதாகவும்,  8 நாட்களில் இதை முடித்ததாகவும் மாணவர் சந்தோஷ் தெரிவித்தார். 



அவரது முயற்சியை பாராட்டி சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சதீஷ்குமாரை பலர் பாராட்டினர் வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்