பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது
x
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் முக்கிய தொடர்புடைய திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்த போது சரண்டைந்த மணிவண்ணன்என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தற்போது சிபிஐ விசாரித்து வரும் பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் என 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்