பெண்களுடன் அன்னையர்தினம் கொண்டாடிய முதலமைச்சர்
முதல்வர் பழனிச்சாமி, செக்காரக்குடி கிராம பெண்கள் மற்றும் வயதான முதியவர்களுடன் இணைந்து அன்னையர் தினத்தையும் தனது பிறந்தநாளையும் கொண்டாடினார்.
ஓட்டப்பிடாரம் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம், வல்லநாடு, செக்காரக்குடி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். செக்காரக்குடி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, செக்காரக்குடி கிராம பெண்கள் மற்றும் வயதான முதியவர்களுடன் இணைந்து அன்னையர் தினத்தையும் தனது பிறந்தநாளையும் கொண்டாடினார். பின்னர் கேக் வெட்டி அவர்களுக்கு வழங்கினார்.
Next Story