குளுகுளு சீசன் - குவிந்த சுற்றுலா பயணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்...

கொடைக்கானலில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
x
கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு குவிந்தனர். இதன் காரணமாக மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து அப்சர்வேட்டரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர்  தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய போலீசார் இருந்தும்  நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது .இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நகரில் குவிந்து வரும்  சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளில்  உள்ள சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்ததுடன் ஏரியில் படகு சவாரி, ஏரியினை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர்.  பலர் தங்குவதற்கு அறைகள்கிடைக்காததன்  காரணமாக சாலை ஓரங்களிலும் வாகனங்களிலும் தங்கினர். தொடர் சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்