ரயில் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு - பாலகிருஷ்ணன், ரயில்வே டிஐஜி

சேலம் - கேரளா மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
x
சேலம் - கேரளா மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அந்த வழியாக சென்ற ரயிலில் அண்மையில் 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள், மாவெலிப்பாளையம் பகுதியில் குதித்து தப்பியுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தில், போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாகவும் கூறினார். இந்தச் சம்பவத்தில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ள போலீசார், குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பயணிகள் பயப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்