காவல் நிலைய அதிகாரிகள் மீது, சக போலீசார் விசாரணை : நீதிமன்ற நடவடிக்கையை கேலிகூத்தாக்கும் செயல்- நீதிமன்றம்

காவல் நிலைய அதிகாரிகள் மீதான புகாரை, அதே காவல் நிலைய அதிகாரிகள் விசாரிப்பது நீதிமன்ற நடவடிக்கையை கேலிகூத்தாக்கும் செயல் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் நிலைய அதிகாரிகள் மீது, சக போலீசார் விசாரணை : நீதிமன்ற நடவடிக்கையை கேலிகூத்தாக்கும் செயல்- நீதிமன்றம்
x
காவல் நிலைய அதிகாரிகள் மீதான புகாரை, அதே காவல் நிலைய அதிகாரிகள் விசாரிப்பது நீதிமன்ற நடவடிக்கையை கேலிகூத்தாக்கும் செயல் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார் ஒன்று காணாமல் போனது தொடர்பாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல், புகாரளித்த தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து  அச்சுறுத்துவதாக ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அதில், தம் கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், ஆறுமுகம் என்பவரை அனுப்பி புலிகுட்டி அய்யனார் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். மனுவை விசாரித்த மதுரை மாவட்ட 4 வது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி, விசாரணைக்கு வேறு அதிகாரியை நியமிக்கவும், 7 நாட்களுக்குள் வழக்கு பதிவு செய்து, நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ,10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்