ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய ஆட்டோ ஓட்டுநர்கள்.... கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

கோவையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் சிக்கியுள்ளனர்.
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய ஆட்டோ ஓட்டுநர்கள்.... கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
x
கோவை கவுண்டம்பாளையம் அங்கப்பா பள்ளி அருகே உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்த‌தை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதை தொடர்ந்து அலார சத்தம் நின்றவுடன் மீண்டும் வந்து, பணம் உள்ள பெட்டியை உடைக்க முயன்றுள்ளனர். கடைசி வரை பெட்டியை உடைக்க முடியாத‌தால், அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த‌தை தொடர்ந்து, அதை வைத்து பாலாஜி, புவனேஷ்வர், ரங்கராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர். மூவரும் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுவதும், மது போதையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்