வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக கூறி மோசடி : நகைக்கடை உரிமையாளர் தலைமறைவு

சென்னையில் வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக கூறி கோடிக்கணக்கான நகைகளுடன் தலைமறைவாகியுள்ள நகைக்கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
x
சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் நகைக்கடை ஒன்று,  இஸ்லாமியர்களுக்கு  வட்டியில்லா நகைக்கடன் வழங்கி வந்தது. சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் வழங்கி வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக நகையை அடகு வைத்தவர்கள், பணத்தை  திருப்பி செலுத்திய பின்பும் நகையை தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இந்நிலையில், நகைக்கடை உரிமையாளர் கோடிக்கணக்கான நகைகளுடன் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், நகைகளை மீட்டு தரக்கோரி சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து நகைக்கடை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்