"மழை வேண்டி முக்கிய கோவில்களில் யாகம்" - இந்துசமய அறநிலைய துறை உத்தரவு

தமிழகத்தில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மழை வேண்டி முக்கிய கோவில்களில் யாகம் - இந்துசமய அறநிலைய துறை உத்தரவு
x
தமிழகத்தில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அனைத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு பணீந்திர ரெட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 2019-20-ஆம் ஆண்டு நல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக பணீந்திர ரெட்டி குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, முக்கிய கோவில்களில், பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு அனைத்து சார்நிலை அலுவலர்கள் யாகம் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல் நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை ஓதுதல்

திருஞானசம்பந்தர் இயற்றிய 12-ஆம் திருமுறையில் தேவார மழைப்பதிகத்தை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை கொண்டு வாசித்து வழிபாடு செய்தல், சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா செய்தல், சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேகம், மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல், ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல், நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருப்புன்கூர் சிவன் கோவிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல்

வருண சூக்த வேத மந்திர பாராயணம் செய்தல், வருண காயத்ரி மந்திர பாராயணம் செய்தல் என அந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட அக்கறையுடன் செயல்பட வேண்டும் என க.பணீந்திர ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். அந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்